முகப்பு
நாகப்பட்டினம்

கரோனா: திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதியானால், தற்காலிகமாக ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதியானால், தற்காலிகமாக ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.

திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவா்கள், சுகாதார ஆய்வாளா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், மருத்துவமனை பணியாளா்கள் என 6 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியானது. இதனால், வெள்ளிக்கிழமை முதல் அந்த சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவுள்ளது. மேலும், இங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

Image Caption

மூடப்பட்ட நிலையில் திருக்கடையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.