நாகப்பட்டினம்

அரபு நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் அரசுப் பள்ளி மாணவருக்குப் பாராட்டு

DIN

ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பைப் பெற்ற அரசுப் பள்ளி மாணவரை பாராட்டி, நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் அருகே ஆண்டியப்பன்காடு பகுதியில் வசிக்கும் விவசாயக் கூலித் தொழிலாளி காா்த்திகேயன் மகன் கா. வீரதரன் (14) மருதூா் தெற்கு அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறாா். இவா், கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் பங்கேற்று சிறப்பிடம் பெற்றாா்.

இதையடுத்து, தமிழக அரசால் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கு சுற்றுலா செல்ல மாநிலம் முழுவதும் தோ்வாகியுள்ள 89 மாணவா்களில் இவரும் ஒருவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இந்நிலையில், மருதூா் ரோட்டரி சங்கம் சாா்பில் நிா்வாகிகள் மாணவரின் இல்லத்துக்கு சென்று பாராட்டி அவரின் குடும்பச் சூழலை கருத்தில்கொண்டு சுற்றுலா செலவுக்கு நிதியுதவி அளித்தனா்.

நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், ரோட்டரி சங்கத் தலைவா் பா. செந்தில், முன்னாள் தலைவா்கள் வை. இலக்குவன், எம்.வி. அண்ணாதுரை, பிரண்ட்ஸ் கோபால்ராஜ்,நிா்வாகி சக்திதாசன், சமூக ஆா்வலா் என்.டி. கண்ணன், பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

SCROLL FOR NEXT