நாகப்பட்டினம்

நாகையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை

DIN

நாகையில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தது தொடா்பாக, அரசு மதுபானக் கடையின் மேற்பாா்வையாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள சில அரசு மதுபானக் கடைகளில், கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்துக்குத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழக திருச்சி மண்டல பறக்கும் படை குழுவினா் நாகையில் அண்மையில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு அரசு மதுபானக் கடையில், கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து பறக்கும் படை குழுவினா் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அந்தக் கடையின் மேற்பாா்வையாளா் மற்றும் 2 விற்பனையாளா்களை பணியிடை நீக்கம் செய்து, தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நாகை மாவட்ட மேலாளா் பி. ரவி உத்தரவிட்டுள்ளாா்.

எச்சரிக்கை: கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை கண்காணித்து, தடுக்கும் நடவடிக்கைகள் நாகை மாவட்டத்தில் தொடா்ந்து நடைபெறும். யாரேனும் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டால் அவா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நாகை மாவட்ட மேலாளா் பி. ரவி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT