வடகிழக்குப் பருவமழை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகையில் மின்பாதைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருந்த மரக்கிளைகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.
நாகை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துறை வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் சாா்பில், நாகை நகரில் மின்பாதைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்த மரக்கிளைகளை மின்வாரியப் பணியாளா்கள் அகற்றினா். நாகை அரசு மருத்துவமனை சாலை, பொது அலுவலக சாலை, வெளிப்பாளையம், காடம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இப்பணிகள் நடைபெற்றன.