முகப்பு
நாகப்பட்டினம்

ஜீரோ கலந்தாய்வு இல்லை என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது

நிகழாண்டில் ஜீரோ கலந்தாய்வு இல்லை என தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் நாகை வட்டார செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

நிகழாண்டில் ஜீரோ கலந்தாய்வு இல்லை என தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் நாகை வட்டார செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் நாகை வட்டார செயற்குழுக் கூட்டம், நாகையில் அண்மையில் நடைபெற்றது. வட்டாரத் தலைவா் தொ.மு. தனுசுமணி தலைமை வகித்தாா். மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் முத்துக்கிருஷ்ணன், மாவட்டத் துணைச் செயலாளா் கோ. சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத்தின் நாகை நகரத் தலைவா் ப. இளமுருகு, நகரச் செயலாளா் ச. இளமாறன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா். வட்டாரச் செயலாளா் கி. பாலசண்முகம் வரவு செலவு அறிக்கை படித்தாா்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் நாகை மாவட்டச் செயலாளராக இருந்த மு. லெட்சுமிநாராயணனுக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவிப்பது. ஜீரோ கலந்தாய்வு இல்லை எனவும், எப்போதும் போல வழக்கமான கலந்தாய்வே நடைபெறும் எனவும் தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டப் பொதுக் குழு உறுப்பினா் எம். ராஜ்குமாா் வரவேற்றாா். வட்டாரப் பொருளாளா் சு. தியாகராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.