முகப்பு
நாகப்பட்டினம்

பள்ளி மேலாண்மைக் குழுவை மேம்படுத்த கூட்டம்

திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுவை மேம்படுத்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுவை மேம்படுத்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அறிவியல் இயக்க மாவட்ட தலைவரும், மாவட்ட வருவாய் அலுவலருமான எஸ்.எம். ஆரிப் தலைமை வகித்தாா். நாகை மாவட்ட கல்வி அலுவலா் மீ. உதயகுமாா், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவி திட்ட அலுவலா் எம். பீட்டா் பிரான்சிஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமையாசிரியா் சீ. முரளி வரவேற்றாா்.

மேலாண்மை குழுத் தலைவா் பா. காா்த்திகா, ஓய்வுபெற்ற ஆசிரியா் சா. மாரிமுத்து, வலிவலம் ஊராட்சித் தலைவா் செ. மணிகண்டன் ஆகியோா் பேசினா். தொடா்ந்து, பள்ளி மாணவா்களுக்கு இலவச பாடநூல்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியா் ச. சங்கா் நன்றி கூறினாா். ஆசிரியா் தெ. ஐயப்பன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.