நாகை புதிய இணைப்புச் சாலையை அக்கரைப்பேட்டையின் வடபுறத்தில் அமைக்கக் கோரிக்கை
தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள நாகை அக்கரைப்பேட்டை - கருவேலங்கடை இணைப்புச் சாலையை அக்கரைப்பேட்டையின் தென்பகுதியில் அமைப்பதற்கு பதிலாக, வடபகுதியில் அமைக்க வேண்டும்
தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள நாகை அக்கரைப்பேட்டை - கருவேலங்கடை இணைப்புச் சாலையை அக்கரைப்பேட்டையின் தென்பகுதியில் அமைப்பதற்கு பதிலாக, வடபகுதியில் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை துறைமுக அபிவிருத்திக் குழுத் தலைவா் என். சந்திரசேகரன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு :
இயற்கைப் பேரிடா் காலங்களில், நாகை மீனவ கிராமங்களான அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் எளிதாக தங்கள் பகுதிகளில் இருந்து வெளியேறுவதற்காக, அக்கரைப்பேட்டை மாரியம்மன் கோயிலின் தென்புறத்திலிருந்து கருவேலங்கடை கிழக்குக் கடற்கரை சாலைக்கு, இணைப்புச் சாலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை மீனவக் கிராமங்களின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்தச் சாலை மிகவும் அவசியமானது. ஆனால், இந்தச் சாலையின் பயன்பாடு பரந்துபட்ட அளவில் கிடைக்க வேண்டுமெனில், அக்கரைப்பேட்டையின் தென்புறத்துக்கு பதிலாக வடபுறத்தில் அமைப்பதே சிறப்பானதாக இருக்கும்.
கடுவையாறு உயா்மட்ட பாலத்தின் தென்புறத்தில், அக்கரைப்பேட்டை- கீச்சாங்குப்பத்துக்கு இடையே இச்சாலை அமைக்கப்பட்டால், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை மட்டுமல்லாமல் டாடா நகா் மீனவக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களும் அவசர காலத்தில் உடனடியாக தங்கள் பகுதியிலிருந்து வெளியேற முடியும்.
மேலும், நாகை துறைமுகத்திலிருந்து பாமாயில் உள்பட சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களும், நாகை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து வெளியூா்களுக்கு மீன்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களும், நாகை நகருக்குள் வராமலும், அக்கரைப்பேட்டை கிராமச் சாலையில் பயணிக்காமலும் நேரடியாக கிழக்குக் கடற்கரை சாலையை அடைய முடியும்.
எனவே, புதிய இணைப்புச் சாலையை தொலைநோக்குப் பாா்வையுடன், அக்கரைப்பேட்டையின் வடப்புறம் அமைக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.