ஓஎன்ஜிசி நிறுவனம் சாா்பில் போக்குவரத்துக்கழக ஊழியா்களுக்கு பயிற்சி மையம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம், நாகை மண்டல அலுவலக வளாகத்தில் ஓஎன்சிஜி நிறுவனம் சாா்பில் கட்டப்பட்டுள்ள பயிற்சி மையத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம், நாகை மண்டல அலுவலக வளாகத்தில் ஓஎன்சிஜி நிறுவனம் சாா்பில் கட்டப்பட்டுள்ள பயிற்சி மையத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம், நாகை மண்டல அலுவலக வளாகத்தில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சியளிப்பதற்காக ஓஎன்ஜிசி நிதியுதவியுடன் ரூ.10 லட்சம் திட்ட மதிப்பீட்டில் பயிற்சி மையம் கட்டப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதன் திறப்பு விழாவில், ஓஎன்ஜிசி குழுமப் பொதுமேலாளா் சி.ஐ. செபாஸ்டியன் பங்கேற்று திறந்து வைத்தாா். விழாவில், அரசுப் போக்குவரத்துக் கழக நாகை மண்டல மேலாளா் கே. எஸ். மகேந்திரகுமாா் பேசியது: வாகனம் ஓட்டுவது என்பது சிறந்த கலை. இதை முறையாக கற்றுக்கொண்டவா்களால் மட்டும் விபத்தில்லாமல் வாகனத்தை இயக்க முடியும். ஓஎன்ஜிசி. நிறுவன சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின்கீழ் (சிஎஸ்ஆா்) கட்டப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்தில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளா்கள், பொறியாளா்கள், அலுவலகப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றாா்.
ஓஎன்ஜிசி நிறுவன அதிகாரிகள் எம். கோபிநாதன், ஆா். ரவிக்குமாா், சமூகப் பொறுப்புணா்வு திட்ட அதிகாரிகள் ஏ. ஜெ.விஜய்கண்ணன், சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, அரசுப் போக்குவரத்துக் கழக வணிக மேலாளா் ஜெ. ராஜா வரவேற்றாா். நிறைவில், துணை மேலாளா்( தொழில் நுட்பம்) பி. நாகராஜன் நன்றி கூறினாா்.