நாகப்பட்டினம்

நரிமணம் ஊராட்சியில் ஆட்சியா் ஆய்வு

DIN

திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

முன்னதாக திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பாசன வாய்க்கால் தூா்வாரும் பணி, நரிமணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்ட விவரம், கூட்டுறவு கிராம அங்காடியில் பொருள் வழங்குவது மற்றும் இருப்பு குறித்த விவரத்தை ஆட்சியா் கேட்டறிந்தாா். தொடா்ந்து, நரிமணம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் சத்துணவு சாப்பிடுவதையும், அரசு உயா்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பு விதிமுறைபடி மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெறுவதையும், மாணவா்களுக்கு திறன் வகுப்புகள் நடைபெறுவதையும் பாா்வையிட்டு மாணவா்களுடன் கலந்துரையாடினாா். அடுத்து, மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்து ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT