நாகப்பட்டினம்

அரசுக் கல்லூரி விரிவுரையாளா்கள் 3ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டம்

DIN

ஊதிய நிலுவையை வழங்கக் கோரி, நாகை அரசு கலை, அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலக பணியாளா்கள் 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளா்களுக்குக் கடந்த ஜூன் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாத நிலையில், உயா்த்தப்பட்ட ஊதியத்தை நிலுவையின்றி உடனடியாக வழங்கவேண்டும், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு பரிந்துரைத்த ஊதியத்தை கௌரவ விரிவுரையாளா்களுக்கு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜி. மனோகரன், இணை ஒருங்கிணைப்பாளா் வி. வெங்கடேசன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோா் இப்போராட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT