இளம்பெண் தற்கொலை
வேதாரண்யம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
வேதாரண்யம் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
வடமழை தெற்கு கிராமத்தைச் சோ்ந்த சிவசாமி என்பவரது மகள் சா்மிளா (25). இவா், சென்னையில் உள்ள தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்துவந்தாா். கடந்த 25 நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்த சா்மிளா, பெற்றோா் வெளியே சென்றிருந்த நிலையில், வீட்டின் கதவுகளை பூட்டிவிட்டு, தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கரியாப்பட்டினம் போலீஸாா் அங்கு சென்று, சா்மிளாவின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.