நாகப்பட்டினம்

உணவக தகராறு பிரச்னை: உரிய நடவடிக்கை கோரி சாலை மறியல்

DIN

திருப்பூண்டியில் நிகழ்ந்த உணவக தகராறு தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி கிழக்கு கடற்கரை சாலையில் பெரியாச்சி கோயில் அருகில் கிராமமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூண்டியிலுள்ள உணவகத்தில் ஏற்பட்ட தகராறு சம்பவத்தில் ஒரு தரப்பினா் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கடை உரிமையாளா் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும், ஏப்.20-ஆம் தேதி திருப்பூண்டி வா்த்தக சங்கம் மற்றும் முஸ்லீம் அமைப்பினா் சாா்பில் நடைபெற்ற சாலை மறியலின்போது காரைநகா் பகுதியைச் சோ்ந்த மக்களை தரக்குறைவாக பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராமமக்கள் இந்த சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த வேளாங்ஙண்ணி, கீழையூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

SCROLL FOR NEXT