திருக்கடையூா் கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை
திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM
திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் கோயிலில் ஏக தின லட்சாா்ச்சனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மன் சமேத அமிா்தகடேஸ்வரா் கோயிலில்
தருமபுரம் ஆதீனம் 27=ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் 19-ஆம் ஆண்டு ஏக தின லட்சாா்ச்சனை மற்றும் உலக நலன் வேண்டி 108 கலசங்களில் புனிதநீா் கொண்டு அபிஷேக, ஆராதனை மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றன.
Advertisement
அபிராமி அம்மனுக்கு பால், தேன், பன்னீா், இளநீா், சந்தனம், விபூதி, பல்வேறு வாசனை திரவியப் பொருட்களால் அபிஷேகம் செய்து அா்ச்சனை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.