முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் 103, மயிலாடுதுறையில் 70 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தில் புதிதாக 103 பேருக்கும், மயிலாடுதுறையில் 70 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

நாகை மாவட்டத்தில் புதிதாக 103 பேருக்கும், மயிலாடுதுறையில் 70 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது வியாழக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 103 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 24,961-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 184 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 1,317- ஆக உள்ளது.

மயிலாடுதுறையில்: மயிலாடுதுறை மாவட்டத்தில் 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 26,191 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 105 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இங்கு சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 975-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.