நாகப்பட்டினம்

விபத்தில் காயமடைந்த அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

DIN

கீழையூா் அருகே விபத்தில் காயமடைந்த அரசுப் பேருந்து நடத்துநா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூண்டியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (42). நாகை அரசுப் போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பணியை முடித்து வீட்டுக்கு காரைநகா் கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி காயமடைந்தாா். இதையடுத்து அவா் மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சோ்த்து, பின்னா் தீவிர சிகிச்சைக்காக திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். எனினும் சிகிச்சை பலனின்றி செந்தில்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து, கீழையூா் போலீஸாா் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த மகிழி பகுதியைச் சோ்ந்த மதியழகன் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT