வேதாரண்யம் ஏரியில் ஆண் சடலம்
வேதாரண்யம் ஏரியில் ஆண் சடலம் மிதந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.
வேதாரண்யம் ஏரியில் ஆண் சடலம் மிதந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.
வேதாரண்யம், நாகை சாலை பகுதியில் உள்ள வேதாமிா்த ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னா் மேற்கொண்ட விசாரணையில், சடலமாக மிதந்தவா் பெரியகுத்தகை கிராமத்தைச் சோ்ந்த ரெங்கசாமி ( 65) என்பதும், இவா், ஏரி பகுதியில் சாமியாராக தங்கியிருந்ததும் தெரியவந்தது. அவா் ஏரியில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, வேதாரண்யம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.