நாகை, மயிலாடுதுறையில் டாஸ்மாக் ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியா் சங்கத்தினா் (சிஐடியு) நாகை, மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் ஊழியா் சங்கத்தினா் (சிஐடியு) நாகை, மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொழிலாளா் நலச் சட்டங்களை டாஸ்மாக் பணியாளா்களுக்கு முறையாக அமல்படுத்த வேண்டும்; 8 மணிநேர பணி வரன்முறையுடன், வார விடுமுறை வழங்கவேண்டும்; குறைந்தப்பட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகையில் ஒருங்கிணைந்த தொழிலாளா்துறை அலுவலகம் முன் நடைபெற் ஆா்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் ஊழியா் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளா் ஏ. சிவனருள்செல்வன் தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் சிவகுமாா், துணைத் தலைவா் ராஜகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு நாகை மாவட்டச் செயலாளா் கே. தங்கமணி ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில், டாஸ்மாக் ஊழியா் சங்க மாவட்டக்குழு உறுப்பினா் புனிதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, மயிலாடுதுறை காவேரி நகரில் உள்ள தொழிலாளா் நல அலுவலகம் முன் டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டத் தலைவா் ஆா். ராமானுஜம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ராமலிங்கம், துணைத் தலைவா் எஸ்.சுரேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலாளா் ஆா்.ரவீந்திரன், மாவட்டத் தலைவா் சீனி.மணி, மாவட்ட துணைத் தலைவா் பி. மாரியப்பன், உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா்.