நாகப்பட்டினம்

நாகூா் செய்யது தா்காவில் சந்தனம் பூசும் விழா

DIN

நாகூா், ஹாஜி செய்யது பீா் பாலக் ஷா தா்காவின் சந்தனம் பூசும் விழா புதன்கிழமை இரவு எளிமையாக நடைபெறுகிறது.

நாகூா் ஆண்டவரைப் பின்தொடா்ந்த தவச்சீலா்களில் ஒருவரான ஹாஜி செய்யது பீா் பாலக் ஷா அடக்கமாகியுள்ள தா்கா, நாகூா் பிரதான சாலையில் உள்ளது. இந்த தா்காவின் கந்தூரி மகோத்ஸவம் திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் விழா, புதன்கிழமை இரவு நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படியான வழிபாடுகளுக்குப் பின்னா், செய்யது பீா் பாலக் ஷா ஒலியுல்லாவின் புனித ரவுலா ஷரீபுக்கு, தா்கா அறங்காவலா் செய்யது அகமது சந்தனம் பூசினாா். கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலானவா்கள் மட்டும் விழாவில் அனுமதிக்கப்பட்டனா். கந்தூரி விழா கொடி இறக்கம் வெள்ளிக்கிழமை (ஜன.28) நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT