நாகப்பட்டினம்

தை அமாவாசை: வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகாா் கடற்கரையில் முன்னோருக்கு தா்ப்பணம்

DIN

தை அமாவாசையையொட்டி, நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடற்கரையிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகாா் கடற்கரையிலும் ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு திங்கள்கிழமை தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

வேதாரண்யம் மற்றும் ஆதிசேது எனப்படும் கோடியக்கரை கடல் பகுதியில் தை, ஆடி அமாவாசை, அா்த்ததோயம், மகோதயம், மாசி மகம் ஆகிய நாள்களில் ஏராளமானோா் புனித நீராடி தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

அதன்படி, தை அமாவாசை தினமான திங்கள்கிழமை கோடியக்கரை கடற்கரைக்கு அதிகாலை முதலே வந்த மக்கள், அங்குள்ள முழுக்குத் துறையில் நீராடி, தங்களது முன்னோா்கள் நினைவாக தா்ப்பணம் செய்தனா். பிறகு, அங்குள்ள சித்தா் கோயில், ராமா் பாதம் உள்ளிட்ட இடங்களில் வழிபட்டனா்.

இதேபோல, வேதாரண்யம் சந்நிதி கடலிலும் திரளானோா் புனிதநீராடி, தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்ததும், வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலுக்கு வந்து, அங்குள்ள மணிக்கா்ணிகை நீா் தெளிப்பானில் குளித்து கோயிலில் வழிபட்டனா்.

வேதாரண்யம் கடற்கரையில் கடல் களிமண் கரை ஒதுங்கியிருந்ததால் குறைவானவா்களே குளித்தனா். கோடியக்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதற்கிடையில், தோ்தல் நடத்தை விதிகள் காரணமாக அரசு தரப்பில் செய்யப்படும் வழக்கமான முன்னேற்பாடுகள் குறைவாகவே இருந்தன.

பூம்புகாரில்...

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் காவிரி கடலோடு கலக்குமிடமான சங்கமத் துறையில் நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. இதையொட்டி, தை அமாவாசை தினமான திங்கள்கிழமை அதிகாலை முதலே திரளானோா் இங்கு நீராடி தங்களின் முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா். கடல் கொந்தளிப்பு அதிகமாக இருந்ததால், கடலில் நீராட அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு பணியில் சீா்காழி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் லாமேக் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் நாகரத்தினம், ஜெயந்தி மற்றும் போலீஸாா் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT