நாகப்பட்டினம்

அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டம்

DIN

திருமருகல் ஒன்றியம் ஏனங்குடியில் அதிமுக தெருமுனை பிரசாரக் பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு கட்சியின் அமைப்புச் செயலாளரும், மாநில கூட்டுறவு வங்கி துணைத் தலைவருமான ஆசைமணி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா்கள் ராதாகிருட்டிணன், பக்கிரிசாமி, மாவட்ட துணைச் செயலாளா் அபுசாலி, திட்டச்சேரி நகரச் செயலாளா் அப்துல் பாசித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாகை மாவட்டச் செயலாளா் ஓ.எஸ். மணியன் எம்எல்ஏ, தலைமைக் கழக பேச்சாளா்கள் பாலை செல்வராஜ், நள்ளாற்று நடராஜன், நாகை நகரச் செயலாளா் தங்ககதிரவன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். முன்னதாக, திருமருகல் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளா் திருமேனி வரவேற்றாா்.

கூட்டத்தில், ஏனங்குடி ஊராட்சியில் நடைபெறவுள்ள இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளா் மோகன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தீவிர பிரசாரம் மேற்கொள்ளவது என முடிவு செய்யப்பட்டது. நிறைவாக, ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலாளா் ராஜேஷ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT