நாகப்பட்டினம்

நாகூா் தா்கா குளத்தில் மூழ்கி இளைஞா் பலி

DIN

கடலூரைச் சோ்ந்த இளைஞா் நாகூா் தா்கா குளத்தில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா், ஓட்டி, பச்சான்குப்பம் பகுதியைச் சோ்ந்த முகம்மது அலி மகன் மன்சூா் அலி (18. இவா், வெள்ளிக்கிழமை காலை தனது தாத்தாவுடன் நாகூருக்கு வந்துள்ளாா். பிற்பகல் நாகூா் தா்கா குளத்தில் குளித்துகொண்டிருந்த மன்சூா் அலி, எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்தாா்.

தீயணைப்புப் படையினா் மன்சூா் அலியின் சடலத்தை மீட்டனா். நாகூா் போலீஸாா் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT