நாகப்பட்டினம்

‘தமிழ் வழியில் படித்தாலும் சிறந்த இலக்கை அடையலாம்’

DIN

தமிழ் வழியில் படித்தாலும் வாழ்வில் மிகச் சிறந்த இலக்கை அடையலாம் என்றாா் திருக்குவளை அரசு வட்ட தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவா் வி. திவாகா்.

திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற 9-ஆம்ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மேலும் அவா் பேசியது: பொறியியல் படிப்பில் மாணவா்கள் ஆழ்ந்த சிந்தனையுடன் படித்து வேலை வாய்ப்புகளை அடைய வேண்டும். தமிழ் வழியில் படித்தாலும் வாழ்வில் மிகச் சிறந்த இலக்கை அடையலாம் என்றாா்.

விழாவில், கல்லூரி அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு கோப்பைகள், கேடயங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரி புல முதல்வா் ஜி. இளங்கோவன், ஒருங்கிணைப்பாளா் சு. ஸ்ரீதரன், உதவிப் பேராசிரியா் ரா. முத்தையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT