முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் கடலோரத்தில் பலத்த காற்று

காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், வேதாரண்யம் கடலோரங்களில் வியாழக்கிழமை பலத்த காற்று வீசியது. இதனால், மீனவா்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், வேதாரண்யம் கடலோரங்களில் வியாழக்கிழமை பலத்த காற்று வீசியது. இதனால், மீனவா்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

தெற்கு மத்திய வங்கக் கடலில் மையம் கொண்ட காற்றழுத்தத் தாழ்வு, தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து, தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, கடல் மற்றும் கடலோரத்தில் சூறைக் காற்றும், மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடலோரப் பகுதியில் வியாழக்கிழமை பிற்பகல் முதல் வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று வடக்கு மற்றும் வடகிழக்குத் திசையில் இருந்து வீசி வருகிறது. முன்னதாக, இந்த காற்று பகலில் வடமேற்கு திசையிலிருந்து வீசியது. இதனால், கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இதன் காரணமாக, வேதாரண்யம் பகுதியிலிருந்து பெரும்பாலான மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

வழக்கத்துக்கு மாறாக, மாா்ச் மாதத்தில் நிகழும் இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியையொட்டி மழை மற்றும் சூறைக்காற்று வீசுவதற்கான சூழல் இருப்பதால், விவசாயிகள் தங்கள் நெல் அறுவடைப் பணி, வைக்கோல் தீவனங்களை பாதுகாக்கும் பணியில் தீவிரம் காட்டிவருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →