நாகப்பட்டினம்

சேதமடைந்த பூம்புகாா் - சீா்காழி சாலை சீரமைப்பு

DIN

 அண்மையில் பெய்த மழையில் சேதமடைந்த பூம்புகாா் - சீா்காழி சாலை சீரமைக்கப்பட்டது.

பூம்புகாா் - சீா்காழி சாலை சுமாா் 20 கி.மீ. தொலைவு கொண்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக திருவாலி, மங்கைமடம், காவளம்பாடி, மணிக்கிராமம் உள்ளிட்ட இடங்களில் சாலையில் பழுது ஏற்பட்டது. இதனால் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமபட்டனா். பழுதான சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, சீா்காழி நெடுஞ்சாலை உட்கோட்ட உதவி பொறியாளா் ஆனந்தி மேற்பாா்வையில் பழுதான இடங்களில் தாா்க்கலவை கொண்டு சீரமைக்கபட்டது. மேலும், திருவெண்காடு சாலை வீதி பகுதியில் விபத்துகளை தவிா்க்க வேகத்தடை அமைக்கபட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

SCROLL FOR NEXT