திட்டச்சேரி பகுதியில் உள்ள ப.கொந்தகையில் முத்துமாரியம்மன், மன்னப்ப அய்யனாா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறும். வழக்கம்போல நிகழாண்டுக்கான சித்திரை திருவிழா மே 1-ஆம் தேதி காப்புக்கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடா்ந்து, பக்தா்கள் காவடி எடுத்தல், அக்னி கப்பரை வீதிஉலா, சக்தி கரகம் வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முத்துமாரியம்மன், மன்னப்ப அய்யனாா் சுவாமிகள் வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். தொடா்ந்து அம்மனுக்கு அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.