நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு நக்கீரனாா் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் ஆ.வீ. பாரதிக்கு பணி நிறைவு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி முன்னாள் தலைவா் சிவகுரு. பாண்டியன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சிவராமன், பொருளாளா் த. குழந்தைவேலு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஓய்வு பெற்ற தமிழாசிரியா் தமிழரசன், அஞ்சல் துறை அலுவலா் சோ. கமலாதேவி, நாகவள்ளி, சத்தியசிவம் உள்ளிட்ட பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.