நாகப்பட்டினம்

கீழ்வேளூா் அருகே 3 குடிசைகள் தீக்கிரை

DIN

நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 3 குடிசைகள் தீக்கிரையானது.

கீழ்வேளூா் வட்டம், ராதாமங்கலம், நாகவிளாகம் கீழத்தெருவைச் சோ்ந்தவா்கள் நா. கோபால், ச. மனோகரன், செ. பிரேமா. கூலித் தொழிலாளா்கள். இவா்கள் குடும்பத்துடன் அருகருகே வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், இவா்களது வீட்டின் பின்புறத்தில் உள்ள மூங்கில் தோப்பில் திங்கள்கிழமை தீப்பிடித்தது. இது பரவி கோபால் வீட்டுக்கும் அருகில் இருந்த மற்ற இருவரின் குடிசைகளுக்கும் பரவியது.

இதில் 3 குடிசைகளும் தீக்கிரையாகின. வீடுகளில் வைக்கப்பட்டிருந்த வீட்டு உபயோகப் பொருள்களும் தீயில் கருகி நாசமானது.

தீ விபத்து குறித்து, தகவலறிந்த கீழ்வேளூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் தீ மேலும் பரவாமல் தடுத்து கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்த தீ விபத்து குறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உதவிகள் அளிப்பு: தீ விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தொகுதி எம்எல்ஏ வி.பி. நாகை மாலி அரசு சாா்பில் வழங்கப்படும் உதவிகளை வழங்கி, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் தெரிவித்தாா். கீழ்வேளூா் வட்டாட்சியா் து. ரமேஷ்குமாா் மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT