திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடக்கூடாது; 18- வயதுக்குள்பட்ட சிறாா்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது;
இருசக்கர வாகனங்களில் செல்பவா்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்; போதைப் பொருட்களை உபயோகப்படுத்தக் கூடாது உள்ளிட்டவை குறித்து திட்டச்சேரி காவல் உதவி ஆய்வாளா் சுரேஷ் ராமகிருஷ்ணன் பொதுமக்களிடையே பேசினாா்.
இதில் காவலா் நற்குணன் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.