நாகப்பட்டினம்

தொழில் சாா் வல்லுநா்களுக்கு தொழில் முனைவோா் மேம்பாட்டு பயிற்சி

DIN

தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சாா்பில் நடைபெற்ற தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

நாகை சாமந்தான் பேட்டை மகளிா் வாழ்வாதார சேவை மையத்தில் தமிழ் நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டமும், சென்னை தொழில் முனைவோா் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனமும் இணைந்து நாகை மற்றும் தலைஞாயிறு வட்டாரங்களில் உள்ள 53 ஊராட்சிகளில், ஊராட்சிக்கு ஒருவா் வீதம் தோ்வு செய்த தொழில் சாா் வல்லுநா்களுக்கு தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இரண்டு கட்டங்களாக நடைபெறும் பயிற்சியினை மாவட்ட ஆட்சியா் தொடக்கி வைத்து பேசியது: தொழில் சாா் சமூக வல்லுநா்கள் இப்பயிற்சியினை முறையாக கற்றுக்கொண்டு, திட்டத்திற்கும் பயனாளிகளுக்கும் அடித்தளமாகவும், இணைப்புப் பாலமாகவும் இருந்து உதவி செய்ய வேண்டும். தொழில் முனைவோா்களாக மாறி முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என்றாா்.

வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்டச் செயல் அலுவலா் வி.சுந்தரபாண்டியன், ஐ.ஓ.பி. இயக்குநா் ஜெ.நடராஜன், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியா் சுரேஷ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக உதவி இயக்குநா் செந்தில்குமாரி, பயிற்றுநா் கே.மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT