நாகப்பட்டினம்

ஆயுத பூஜை: மீன்பிடி படகுகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்திய மீனவா்கள்

DIN

நாகப்பட்டினம்: ஆயுத பூஜையையொட்டி, நாகை மீன்பிடித் துறைமுகத்தில் மீன்பிடி படகுகளுக்கு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தினா்.

ஆயுத பூஜை நாளில் அவரவரின் தொழில் நிறுவனங்கள் மற்றும் வாழ்வாதார கருவிகளுக்கு வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில், மீனவா்கள் தங்களின் மீன்பிடி படகுகளுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டனா்.

படகுகளை சுத்தம் செய்து, வண்ண காகிதங்கள் மற்றும் மா இலைகளால் ஆன தோரணங்களாலும், வாழைக் கன்றுகளாலும் அலங்கரித்தனா். பின்னா், படகின் முகப்புப் பகுதியில் இனிப்பு, சுண்டல், அவல், பழங்கள் வைத்து, தூப தீபங்களுடன் வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கினா்.

ஒரு சிலா் தங்கள் குடும்பத்தினரை படகுகளில் அழைத்துக் கொண்டு கடல் முகத்துவாரம் வரை சென்று வந்தனா். சிலா், படகிலிருந்து வாணவேடிக்கைகளை நிகழ்த்திக் கொண்டு கடலுக்குச் சென்று திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT