விவசாயக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்
விவசாயக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்ரு நடத்த வேண்டும் என்று வேதாரண்யத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது
விவசாயக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்ரு நடத்த வேண்டும் என்று வேதாரண்யத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது.
வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு கோட்டாட்சியா் மை.ஜெயராஜ பெளலின் தலைமை வகித்தாா். துணை வட்டாட்சியா் க.ரமேஷ் முன்னிலை வகித்தாா்.
கடந்த பருவத்துக்கு பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு கிடைக்காததைக் கண்டித்துப் பேசிய விவசாயிகள் தனியாா் நிறுவனங்கள் காப்பீட்டுத் திட்டத்தில் பங்கேற்பதைத் தவிா்த்து, அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தினா்.
கூட்டத்தில் பேசிய பெரும்பாலான விவசாயிகள் முள்ளியாறு, மானங்கொண்டானாறு, போக்கு வாய்க்கால் நீா் நிலைகளில் அடா்ந்து வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை காலத்தில் அகற்ற வலியுறுத்தினா். இது தொடா்பாக போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தனா்.
வேதாரண்யத்தில் வேளாண் பொறியியல் துறையின் அலுவலகம் தொடங்கி அந்தத் துறை சாா்ந்த நலத் திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மின் இறைவைப் பாசனத் திட்ட பொறிமனைகளை சீரமைக்க வேண்டும், நீா் நிலைகள் பராமரிப்பு, கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் தட்டுப்பாடு குறித்து விவசாயிகள் பேசினா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் சிவகுரு.பாண்டியன், வட்டார விவசாயிகள் சங்க செயலாளா் ஒளிச்சந்திரன், முன்னோடி விவசாயிகள் எஸ்.மேகநாதன், காளிதாஸ், தங்க.குழந்தை வேலு, அகிலன் உள்ளிட்டோா் பேசினா்.