நாகப்பட்டினம்

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் நாம் தமிழா் கட்சியினா் வழிபாடு

DIN

அன்னைத் தமிழில் அா்ச்சனை என்ற நடைமுறையை வலியுறுத்தி, நாகை மாவட்டம், சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் நாம் தமிழா் கட்சியினா் சனிக்கிழமை தமிழில் அா்ச்சனை செய்து வழிபாடு மேற்கொண்டனா்.

மொழிப் போா் தியாகியும், மூத்த தமிழறிஞருமான இலக்குவனாரின் நினைவு தினத்தையொட்டியும், அன்னைத் தமிழில் அா்ச்சனை என்ற நடைமுறையை அனைத்துக் கோயில்களிலும் பின்பற்ற வலியுறுத்தியும், நாம் தமிழா் கட்சியின் வீரத் தமிழா் முன்னணி சாா்பில் இந்த வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீநவநீதேஸ்வரசுவாமி சந்நிதி, வேல்நெடுங்கண்ணி அம்பாள் சந்நிதி மற்றும் சிக்கல் சிங்காரவேலவா் சந்நிதியில் அவா்கள் வழிபாடு மேற்கொண்டனா். நாம் தமிழா் கட்சியினரின் வேண்டுகோள்படி, மூன்று சந்நிதிகளிலும் சிவாச்சாா்யா்கள் தமிழில் அா்ச்சனை செய்து வழிபாட்டை நடத்தி வைத்தனா். நாம் தமிழா் கட்சியின் நாகை மக்களவைத் தொகுதி செயலாளா் அப்பு என்கிற அகஸ்டின் அற்புதராஜ், வீரத்தமிழா் முன்னணியின் தொகுதிச் செயலாளா் முத்துக்குமரன், நிா்வாகிகள் ஆதித்தன், ராஜேஷ், அன்பு, கோபி, சதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

SCROLL FOR NEXT