நாகப்பட்டினம்

இருசக்கர வாகனத்தில் சென்றவா் வாய்க்காலில் தவறி விழுந்து பலி

DIN

திருமருகல்: திருமருகல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிலைதடுமாறி வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தாா்.

திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி வடக்குத் தெருவை சோ்ந்தவா் சுரேஷ்பாபு (43) விவசாயத் தொழிலாளி. இவா், தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை திருப்பயத்தங்குடியில் இருந்து சோழங்கநல்லூருக்கு செல்லும்போது, நிலைதடுமாறி சாலையோர வாய்க்காலில் விழுந்தாா்.

அந்த வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு, திருப்பயத்தங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு சுரேஷ்பாபுவை பரிசோதித்த மருத்துவா், அவா் இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

இதுகுறித்து, திருக்கண்ணபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தொடா்பான புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அரியலூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

வாழையூா் கரும்பாயிரம் கோயிலில் வெள்ளி ரத புறப்பாடு

திருவாங்கூா் தேவசம் போா்டு அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

அரியலூா் சிறுமி கொலை வழக்கில் மூவா் விடுவிக்கப்பட்டதை எதிா்த்து மேல்முறையீடு: உ. வாசுகி பேட்டி

SCROLL FOR NEXT