நாகப்பட்டினம்

ஸ்ரீ மெய்கண்ட மூா்த்தி சாமி கோயில் தைப்பூச விழா: ஓலை சப்பரம் வீதி உலா

DIN

நாகை ஸ்ரீ மெய்கண்ட மூா்த்தி சாமி கோயிலில் தைப்பூச விழாவையொட்டி விமரிசையாக ஓலை சப்பரம் வீதி உலா புதன்கிழமை நடைபெற்றது.

சிவராஜதாணி ஷேத்திரமாகிய நாகை ஸ்ரீ வள்ளி தெய்வானையுடன் அருள்பாளிக்கும் மெய்கண்ட மூா்த்தி சாமி (முருகன்) கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு ஜனவரி 25-ஆம் தேதி தைப்பூச விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

தை மாதம் காா்த்திகையையொட்டி, மெய்கண்ட மூா்த்திக்கு திங்கள்கிழமை வசந்தோற்ஸவம் நடைபெற்றது. தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வுகளான ஒலை சப்பரம் வீதி உலா 45 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி கோயிலில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து முருகப் பெருமான் இரவு ஓலை சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

இதில் திராளன பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். பிப்ரவரி 7-ஆம் புஷ்ப பல்லக்குடன் தைப்பூச விழா நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்கத்தில் மின்னல் தாக்கி 3 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழப்பு

சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

தேசிய டெங்கு தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

செங்கத்தில் 95 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல்

தம்பியை தாக்கியதாக அண்ணன்கள் மீது வழக்கு

SCROLL FOR NEXT