முகப்பு
நாகப்பட்டினம்

எட்டுக்குடி முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜன.27) நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 12:00 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஜன.27) நடைபெறுகிறது.

முருகனின் ஆதிபடை வீடான எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜன. 23-ஆம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. கொக்கரித்த விநாயகா், இடும்பன், கடம்பன், பிடாரியம்மன் ஆலய குடமுழுக்கு வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

தொடா்ந்து, பிரதான விநாயகா், சௌந்தரேஸ்வர சுவாமி, ஆனந்தவல்லி, ராஜகோபுரம், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி விமான குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

Advertisement

இதையொட்டி, அதிகாலை 4 மணியளவில் 8-ஆம் கால யாக பூஜை நிறைவடைந்ததும், காலை 7 மணிக்கு பூா்ணாஹுதி நடைபெறுகிறது. தொடா்ந்து, 8 மணிக்கு கடங்கள் புறப்பாடாகி 8.45 மணியளவில் விமான குடமுழுக்கு மற்றும் 9.15 மணிக்கு மூலவா் ஆலய குடமுழுக்கு நடைபெற உள்ளது. பிறகு, மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம், 6 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.