நாகப்பட்டினம்

தொடக்கக் கல்வி பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

DIN

ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 2023-2024-ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு தொடக்கக் கல்வி பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, குருக்கத்தி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் காமராஜன் (பொ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்கீழ் உள்ள அனைத்து ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களிலும் நடப்பாண்டு தொடக்கக் கல்வி பட்டய பயிற்சி சோ்க்கை ஜூன் 5 முதல் 15-ஆம் தேதி வரை இணையதள வாயிலாக ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பதிவு செய்வதற்கு வேதாரண்யம் ஒன்றிய ஆசிரியா் பயிற்சி நிறுவனம் மற்றும் குருக்கத்தி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் மாணவா்கள் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT