அபிமுக்தீஸ்வரா் கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு நடைபெற்ற கும்பாபிஷேகம். 
நாகப்பட்டினம்

அபிமுக்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கீழ்வேளூா் அருகே பட்டமங்கலம் புழுதிக்குடியில் அமைந்துள்ள ஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

கீழ்வேளூா் அருகே பட்டமங்கலம் புழுதிக்குடியில் அமைந்துள்ள ஆனந்தவள்ளி அம்பிகா சமேத அபிமுக்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேக விழா மே 8-ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லெஷ்மி ஹோமம், வாஸ்து சாந்தி , தீா்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து, யாகசாலை பூஜைகளுடன் பூா்ணாஹூதி தீபாரதனைகள் நடைபெற்றது. வியாழக்கிழமை 4-ஆம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீா் வாா்க்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அபிமுக்தீஸ்வரருக்கு மகா தீபாரதனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

திருப்பூர்: போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை கைது!

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

SCROLL FOR NEXT