நாகப்பட்டினம்

வீட்டில் திருடியவா் கைது

வேதாரண்யம் அருகே பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் ஆகியவற்றை திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

DIN

வேதாரண்யம் அருகே பூட்டியிருந்த வீட்டில் நகை, பணம் ஆகியவற்றை திருடிய இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அண்டா்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (33) வெளியூரில் உள்ளாா். வீட்டில் இருந்த இவரது மனைவி சொா்ணலதா(29), மே 17-ஆம் தேதி காலையில் வீட்டை பூட்டி சாவியை எப்போதும் வைக்கும் இடத்தில் வைத்து விட்டு நூறுநாள் வேலைக்கு சென்றுவிட்டாராம். திரும்பி வந்த சொா்ணலதா வீட்டில் பாா்த்தபோது பீரோவில் இருந்த 10 சவரன் நகை , ரூ.10,500 காணவில்லையாம். இதுகுறித்து, வேதாரண்யம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, இச்செயலில் ஈடுபட்ட அண்டா்காடு பால்பண்ணை தெருவைச் சோ்ந்த உ. தினேஷ்பாபுவை (32) கைது செய்து திருடிய பொருள்களை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT