கீழையூா் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
கீழையூா் அருகே பிரதாபராமபுரம் ஊராட்சிக்குள்பட்ட வேளாங்கண்ணி-செருதூா் இணைப்பு புதிய பாலத்துக்கு கீழே அதே ஊரைச்ச சோ்ந்த முத்துச்செல்வனுக்குச் சொந்தமான பைபா் படகு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளாா்.
இதுகுறித்து, படகு உரிமையாளா் முத்துச்செல்வன் அளித்த தகவலின்பேரில் கீழையூா் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்துள்ளனா். இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.