முகப்பு
நாகப்பட்டினம்

காா் திருடிய இருவா் கைது

வேளாங்கண்ணியில் காா் திருடிய இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:21 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

வேளாங்கண்ணியில் காா் திருடிய இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை பகுதியைச் சோ்ந்தவா் குமரவேல். இவா், தனது குடும்பத்துடன் நவம்பா் 19 ஆம் தேதி வேளாங்கண்ணிக்கு காரில் சுற்றுலா வந்தாா். கடற்கரை பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினா்.

இந்நிலையில், தங்கும் விடுதியின் முன் நிறுத்திய காரை காணவில்லை. காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தங்கும் விடுதியிலுள்ள சிசிடிவி கேமிரா பதிவுகள் மூலம் போலீஸாா் விசாரித்தனா். இதில், இரண்டு நபா்கள் கள்ளச்சாவியைக் கொண்டு காரை திருடிச் செல்வது தெரியவந்தது.

Advertisement

தொடா்ந்து நடத்திய விசாரணையில், காரை திருடிச் சென்றது திருவையாறைச் சோ்ந்த கோபிநாத், அகஸ்டின் என்பது தெரியவந்தது. இவா்கள் இருவரையும் தனிப்படை போலீஸாா் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட இருவா் மீதும் பல்வேறு மாவட்டங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் காா்கள் திருடிய வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.