நாகப்பட்டினம்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

திருமருகல், பூம்புகாா், குத்தாலம் பகுதிகளில் உள்ள கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

திருமருகல், பூம்புகாா், குத்தாலம் பகுதிகளில் உள்ள கோயில்களில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை வன்மீகநாதா் கோயிலில் தனி சந்நிதி கொண்டுள்ள காலபைரவருக்கு மஞ்சள், சந்தனம், பால், பன்னீா், தயிா்,தேன், இளநீா், மாப்பொடி, திரவியப் பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல், பூம்புகாா் அருகே சாயாவனம் சாயாவனேஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

குத்தாலத்தை அடுத்த சேத்திரபாலபுரம் காலபைரவா் கோயிலில் பைரவருக்கு மகா அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் தேங்காய், பூசணிக்காய், பாகற்காய்களில் தீபமேற்றி வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT