முகப்பு
நாகப்பட்டினம்

திருமருகல் கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

Updated On : 22 ஏப்ரல், 2024 at 11:29 AM
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள்.
பகிர்:

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரைத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு சித்திரைத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா மற்றும் அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, திருக்கல்யாண உற்சவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Advertisement

இதில், கோயில் செயல் அலுவலா் அசோக்ராஜா, தக்காா் தனலெட்சுமி, கணக்கா் சீனிவாசன், கோயில் திருப்பணிக் குழுவினா் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.22) நடைபெறுகிறது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments