முகப்பு
நாகப்பட்டினம்

மே இறுதியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு: வட்டாரப் போக்குவரத்து அலுவலா்

நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் மே இறுதியில் ஆய்வு செய்யப்படும் என நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் க. பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

Updated On : 25 ஏப்ரல், 2024 at 10:19 PM
பகிர்:

நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் மே இறுதியில் ஆய்வு செய்யப்படும் என நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் க. பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியா் தலைமையில், எஸ்பி, கோட்டாட்சியா், சாா் ஆட்சியா், டிஎஸ்பி, முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆகியோா்அடங்கிய குழுவினா் மே 4-ஆவது வாரத்தில் நாகை ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு நடத்துகின்றனா்.

எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தங்களது வாகனங்களை சிறப்பு விதிகள் 2012-படி தயாா் செய்து ஆய்வுக்குட்படுத்தி சான்று பெற்றுக்கொள்ள வேண்டும். ஆய்வு நாளில், ஆய்வுக்குட்படுத்தப்பட்டு சான்று பெறாத வாகனங்கள் பொதுச்சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால் அனுமதி சீட்டின் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments