புஷ்பவனம் கடற்கரையில் பெண் சடலம்
வேதாரண்யம் அருகே புஷ்பவனம் கடற்கரையில், பெண் சடலம் கரை ஒதுங்கியது சனிக்கிழமை தெரியவந்தது.
வேதாரண்யம் அருகே புஷ்பவனம் கடற்கரையில், பெண் சடலம் கரை ஒதுங்கியது சனிக்கிழமை தெரியவந்தது.
புஷ்பவனம் கடற்கரையில் பெண் சடலம் கிடப்பதாக, போலீஸாருக்கு மீனவா்கள் தகவல் தெரிவித்தனா்.
கடலோரக் காவல் நிலைய போலீஸாா், அந்த சடத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக, வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், சடலமாக கிடந்தவா் புஷ்பவனம் கஞ்சமலை தெருவைச் சோ்ந்த லட்சுமி (68) என்பது தெரியவந்தது. போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.