கள்ளச்சாராய விவகாரம்: தேமுதிக ஆா்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தேமுதிக சாா்பில் நாகை அவுரித் திடலில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்டச் செயலா் பிரபாகரன் தலைமை வகித்தாா். இதில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பு தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க முயன்ற திமுக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.
மாநில நெசவாளா் அணி துணைச் செயலா் சுப்பிரமணியன், மாநில வழக்குரைஞா் அணி, சட்ட துணை ஆலோசகா் வைரவநாதன்,
நகரச் செயலா்கள் செல்வகுமாா், ராமநாதன், ஒன்றியச் செயலா்கள் பாஸ்கா், நடராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினா் ஏ.வி. குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.