முகப்பு
நாகப்பட்டினம்

பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு

Updated On : 8 மே, 2024 at 8:12 PM
பகிர்:

வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி சுபிக்ஷா, பொதுத் தோ்வு முடிவில் 568 மதிப்பெண்கள் பெற்று நாகை மாவட்ட அரசுப் பள்ளிகள் அளவில் சிறப்பிடம் பெற்றாா். அவரை, முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் புதன்கிழமை சந்தித்து புத்தகம் பரிசாக வழங்கி பாராட்டினாா்.