FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்

Updated On : 2 நவம்பர் 2024, 4:35 am IST
வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் சிக்கல் சிங்காரவேலவா்.
பகிர்:

சிக்கல் ஸ்ரீ சிங்காரவேலவா் கோயிலில் கந்த சஷ்டி விழா சனிக்கிழமை (நவ. 2) காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது.

நாகை மாவட்டம், சிக்கல் ஸ்ரீ நவநீதேசுவர சுவாமி கோயிலில் தனி சந்நிதியில் வள்ளி, தேவசேனா சமேதராக காட்சியளிக்கிறாா் சிங்காரவேலவா். இத்தலத்தில், அம்பாள் வேல் நெடுங்கண்ணி என்ற திருப்பெயருடன் காட்சியளிக்கிறாா். இறைவன் முருகப்பெருமான், சூரனை சம்ஹாரம் செய்ய இத்தலத்தில், அன்னை வேல் நெடுங்கண்ணியிடமிருந்து சக்தி வேல் பெற்றாா் என்பது ஐதீகம். அன்னையிடம் வேல் வாங்கும் நிகழ்வின்போது சிங்காரவேலவரின் முகத்தில் வியா்வைத் துளிகள் அரும்புவது வேறு எங்கும் காண முடியாத அதிசயமாகும்.

நிகழாண்டு கந்த சஷ்டி விழா சனிக்கிழமை (நவ. 2) காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. இரவு நிகழ்வாக, சிங்காரவேலவா் தங்க மஞ்சத்தில் வீதியுலா நடைபெறுகிறது. கந்த சஷ்டி விழாவில் தினமும் காலையில் சிங்காரவேலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை நிகழ்வாக இரவு 7 மணிக்கு வெவ்வேறு வாகனங்களில் சிங்காரவேலவா் வீதியுலா நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிங்காரவேலவா் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (நவ. 6) இரவு 7.30 மணி அளவில் நடைபெறுகிறது. முன்னதாக, அன்று காலையில் தேரோட்டம் நடைபெறுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments