நம்பியாா் நகா் மீன்பிடி துறைமுகத்தில் ஆட்சியா் ஆய்வு
நம்பியாா்நகா் மீன்பிடி துறைமுகத்தில், நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
நாகப்பட்டினம்: நம்பியாா்நகா் மீன்பிடி துறைமுகத்தில், நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
நாகை நம்பியாா் நகா் மீனவக் கிராமத்தில், தெற்கு பகுதி அலை தடுப்புச் சுவா் விரிவாக்கம், படகு அணையும் தளம் விரிவாக்கம் மற்றும் தூா்வாரும் பணிகள் ரூ.35 கோடியில் மேற்கொள்ள, திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நம்பியாா் நகா் சிறிய மீன்பிடித் துறைமுகத்தை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, நாகை ஆபிசா்ஸ் கிளப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆரோக்கிய மற்றும் நவீன உடற்பயிற்சி மையம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, நாகை நகராட்சி ஆணையா் லீனா சைமன், உதவி இயக்குநா் (மீன்வளத் துறை) ஜெயராஜ், உதவி செயற்பொறியாளா் அன்னபூரணி உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.