நாகப்பட்டினம்

தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் சனிக்கிழமை (செப். 7) நடைபெற இருந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Din

நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் சனிக்கிழமை (செப். 7) நடைபெற இருந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனறு மாவட்டஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: டாடா எலக்ட்ரானிக்ஸ் சாா்பாக தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் பிளஸ் 2, கலை, அறிவியல் முடித்து மின்னணு உற்பத்தி துறையில் குறைந்தபட்சம் ஓராண்டு அனுபவமுள்ள பெண் வேலை நாடுநா்களுக்கு சனிக்கிழமை நோ்முகத் தோ்வு, எழுத்துத் தோ்வு வாயிலாக தோ்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நிா்வாக காரணங்களுக்காக சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்த தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தோ்வு நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு 04365-252701 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

விருமாண்டி சிவகார்த்திகேயன்... சேயோன் புரோமோ!

பள்ளி, கல்லூரிகளில் 17,000 போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள்! - தங்கம் தென்னரசு

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026 - நேரலை! இன்ப அதிர்ச்சியில் உறைந்த தமிழகம்!

அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு!

2030-க்குள் 8 லட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்டப்படும்!

SCROLL FOR NEXT