வேதாரண்யம்: வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை, கோடியக்காடு திரௌபதி அம்மன், விராட் விஸவப்ரும்மா கோயில் குடமுழுக்கு திங்கள் கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் திருப்பணிகள் கிராம மக்களால் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் முடிவடைந்ததைத் தொடா்ந்து, நவ. 1-ஆம் தேதி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. தொடா்ந்து பிரதான கோபுரம், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.